ஜூன் 1 ஆம் தேதி முதல் 200 விரைவு ரயில்கள் இயக்கப்படும் – ரயில்வே

 

ஜூன் 1 ஆம் தேதி முதல் 200 விரைவு ரயில்கள் இயக்கப்படும் – ரயில்வே

நாடு முழுவதும் இதுவரை 2 ஆயிரத்து 600 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், சுமார் 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயன் அடைந்திருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ், “ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தான் 80 விழுக்காடு அளவுக்கு சிறப்பு ரயிலில் பயணம் செய்துள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் – உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா – தமிழகம், கேரளா – ஒடிஷா, ஆந்திரா – அசாம் இடையே ரயில்கள் இயக்கப்படும். மேற்கு வங்க அரசு கேட்டுக்கொண்டால் ரயில்கள் இயக்கப்படும்.

ஜூன் 1 ஆம் தேதி முதல் 200 விரைவு ரயில்கள் இயக்கப்படும் – ரயில்வே

ரயில்களுக்கான முன் பதிவு கால அவகாசம் 30 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் சமூக இடைவெளி மற்றும் அதீத சுகாதாரம் கடைப்பிடிக்கப்படும். உடனடியாக உண்ணும் உணவு வகைகள் மட்டுமே ரயில்களில் வழங்கப்படும். ஜுன் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளது. முதற்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும். மே 1 ஆம் தேதி முதல் விடப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் பயணிகள் அனைவருக்கும் விலையில்லா உணவு, குடிநீர் வழங்கப்பட்டதாகவும், தனிநபர் இடைவெளியுடன் நோய் பரவலை தடுப்பதற்கான அனைத்து நடைமுறைகளும் எடுக்கப்பட்டது. ரயில் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும்” எனக் கூறினார்.