சத்தியமங்கலம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து!
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே தக்காளி பாரம் ஏற்றி வந்த சரக்கு வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில், சுமார் 200 கிலோ தக்காளி சேதமடைந்தன.
கர்நாடக மாநிலம் சிக்கோலா பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு பிக்கப் வேன் ஒன்று, திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர் அருகே வந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், வேன் ஓட்டுநர் அதிர்ஷ்ட வசமாக காயமின்றி உயிர் தப்பினார். எனினும் வேனில் கொண்டுவரப்பட்ட சுமார் 200 கிலோ அளவிலான தக்காளிகள் நசுங்கி வீணாகின.
விபத்து குறித்து தகவலறிந்து சத்தியமங்கலம் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் பள்ளத்தில் கிடந்த வாகனத்தை மீட்டனர். விபத்து காரணமாக செண்பகபுதூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.