குன்றத்தூரில் 200 கிலோ குட்கா பறிமுதல்-2 பேர் கைது

 

குன்றத்தூரில் 200 கிலோ குட்கா பறிமுதல்-2 பேர் கைது

சென்னை குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

குன்றத்தூரில் 200 கிலோ குட்கா பறிமுதல்-2 பேர் கைது

இந்த நிலையில் குன்றத்தூர் பகுதியில் சம்சுதீன் என்பவர் கடையில் குட்கா விற்கப்படுவதை அடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின்பேரில் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுப்பையா என்பவர் குட்காவை மொத்தமாக சப்ளை செய்வதாக தெரிவித்ததையடுத்து குரோம்பேட்டையில் உள்ள சுப்பையா வீட்டிற்கு சென்ற போலீசார் சுமார் 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

குன்றத்தூரில் 200 கிலோ குட்கா பறிமுதல்-2 பேர் கைது

சுப்பையா குட்காவை மொத்தமாக வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.

குன்றத்தூரில் 200 கிலோ குட்கா பறிமுதல்-2 பேர் கைது