‘தொடர்கதையாகி வரும் தங்கம் கடத்தல்’ – திருச்சி விமான நிலையத்தில் 200 கிராம் தங்கம் பறிமுதல்!

 

‘தொடர்கதையாகி வரும் தங்கம் கடத்தல்’ – திருச்சி விமான நிலையத்தில் 200 கிராம் தங்கம் பறிமுதல்!

சமீப காலமாக தமிழகத்தில் இருக்கும் விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் தங்கம் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் கோவை விமான நிலையத்தில் 2 பெண்கள் நாப்கினில் வைத்து 1.2 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் ரூ.97 லட்சம் மதிப்பிலான 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

‘தொடர்கதையாகி வரும் தங்கம் கடத்தல்’ – திருச்சி விமான நிலையத்தில் 200 கிராம் தங்கம் பறிமுதல்!

இவ்வாறு விமான நிலையங்களில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது வாடிக்கையாகி வரும் நிலையில், திருச்சி விமான நிலையத்திலும் இது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் வந்திருக்கிறது. அதில் வந்த பயணிகளை வழக்கம் போல அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், அதில் சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் பெயர் மகேஷ் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.