“டி .சி. கொடுக்கிறேன்னு ஏ.சி .ரூமுக்குள்..” -சேரில் இருந்த பெண் மீது பாய்ந்த ஸ்கூல் சேர்மேன்

 

“டி .சி. கொடுக்கிறேன்னு ஏ.சி .ரூமுக்குள்..” -சேரில் இருந்த பெண்  மீது பாய்ந்த ஸ்கூல் சேர்மேன்

ஒரு பள்ளிக்கு டிசி வாங்க போன பெண்ணை ,அந்த பள்ளியின் சேர்மேன் பலாத்காரம் செய்த விஷயம் அந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுளளது

“டி .சி. கொடுக்கிறேன்னு ஏ.சி .ரூமுக்குள்..” -சேரில் இருந்த பெண்  மீது பாய்ந்த ஸ்கூல் சேர்மேன்

உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நீரஜ் என்பவர் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார் .அந்த பள்ளியின் சேர்மேனான அவரிடம் அந்த பகுதியை சேர்ந்த ஒரு 20வயது இளம் பெண் தன்னுடைய தம்பியின் ஸ்கூல் டிசி வாங்க சென்றார் .
அப்போது அந்த பெண்ணை பார்த்து, அவர் மீது மோகம் கொண்ட அந்த பள்ளியின் சேர்மேன் அந்த பெண்ணிடம் அப்போது அந்த டிசி யினை கொடுக்காமல் இன்னொரு நாள் வரச்சொன்னார்
மற்றொரு நாள் பள்ளியில் யாருமில்லாத நேரமாக பார்த்து அந்த சேர்மேன் அந்த பெண்ணுக்கு போன் செய்து டிசி வாங்க வரச்சொன்னார் .அப்போது அவர் கூப்பிட்டதும் பள்ளிக்கு சென்ற அந்த பெண்ணை அந்த சேர்மன் அங்குள்ள ஒரு ஏ.சி .விடுதிக்கு அழைத்து சென்றார் .
பிறகு அங்கு வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு அவருடைய காரிலேயே அந்த பெண்ணை அவரின் வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் .
பிறகு அந்த பெண் இந்த விஷயத்தை அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க சென்ற போது அங்கும் அவரை தேடி வந்த அந்த சேர்மேன் அந்த காவல் நிலையத்தில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிய விடாமல் காவல் அதிகாரிகளை மிரட்டியுள்ளார் ,இதனால் அவர் மீது அந்த காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை .பிறகு அந்த பெண் இந்த விஷயத்தை மீடியாவிடம் சொன்ன போது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது .பிறகு அந்த சேர்மேன் நீரஜ் போலீசால் கைது செய்யப்பட்டார்

“டி .சி. கொடுக்கிறேன்னு ஏ.சி .ரூமுக்குள்..” -சேரில் இருந்த பெண்  மீது பாய்ந்த ஸ்கூல் சேர்மேன்