“காட்டுக்குள் கடத்தி ,14 நாட்கள் அடைத்து …”கல்யாணத்திற்கு போன பெண் கதறல் .

 

“காட்டுக்குள் கடத்தி ,14 நாட்கள் அடைத்து …”கல்யாணத்திற்கு போன பெண் கதறல் .

ஒரு உறவினரின் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள சென்ற பெண்ணை கடத்தி ஒரு காட்டுக்குள் அடைத்து 14 நாட்கள் பலாத்காரம் செய்தவரை போலீஸ் கைது செய்தது .

“காட்டுக்குள் கடத்தி ,14 நாட்கள் அடைத்து …”கல்யாணத்திற்கு போன பெண் கதறல் .

ராஜஸ்தானில் பூண்டி மாவட்டத்தில் உள்ள கப்ரென் நகரில் வசிக்கும் ஒரு 20 வயதான இளம் பெண் நவம்பர் 9ம் தேதியன்று தன்னுடைய தாய் மாமன் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள அருகிலுள்ள ஒரு ஊருக்கு சென்றார் .அப்போது அவர் இயற்கை உபாதை கழிக்க ஒரு வயல்  வெளிக்கு சென்றார் .அந்த நேரத்தில் அந்த 

ஊரை சேர்ந்த ஃபோரூலால் ஒட் என்ற நபர் அங்கு ஒரு மோட்டார் ர் சைக்கிளில் வந்தார் .அவர் அந்த பெண்ணை மிரட்டி கோட்டா மாவட்டத்தின் மந்தனா நகரத்திற்கு அருகே ஒரு வனப்பகுதிதிக்கு கடத்தி சென்றார் .அதன் பின்னர் அங்குள்ள ஒரு பழைய பாழடைந்த வீட்டில் அவரை அடைத்து வைத்தார் .அதன் பிறகு 14 நாட்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் .

அங்கிருந்து அந்த பெண் தப்பிக்க எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை .அதன் பின்னர் நவம்பர் 22ம் தேதியன்று எப்படியோ அங்கிருந்து வழியை கண்டறிந்து தப்பித்து ஊருக்குள் வந்து தன்னுடைய தந்தைக்கு போன் செய்தார் . அவரின் தந்தை மகளிடம் அந்த காட்டுக்குள் வழியை கண்டறிந்து தன்னுடைய மகளை அங்கிருந்து மீட்டு சென்றார் .அதன் பின்னர் அந்த பெண் போலீசில் புகாரளித்தார்.

அந்தப் பெண்ணின் புகாரின் பேரில், அந்த குற்றவாளி  ஃபோரூலால் ஒட் மீது கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.

அந்த பெண் முன்னதாக மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டார் .மேலும்  அவரது அறிக்கையை ஒரு மாஜிஸ்திரேட் பதிவு செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

“காட்டுக்குள் கடத்தி ,14 நாட்கள் அடைத்து …”கல்யாணத்திற்கு போன பெண் கதறல் .