திண்டுக்கல் அருகே வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்!

 

திண்டுக்கல் அருகே வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வீரசின்னம்பட்டி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், நேற்று திண்டுக்கல் நகரில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். பின்னர், அனைவரும் வேனில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வத்தலகுண்டு சாலையில் வக்கம்பட்டி அடுத்த கல்லுப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

திண்டுக்கல் அருகே வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்!

இதில், பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த செம்பட்டி போலீசார், பொக்லைன் இயந்திரம் முலம் வேனை மீட்டு, போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.