எல்லை தாண்டி வந்ததாக 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறைப்பிடிப்பு

 

எல்லை தாண்டி வந்ததாக 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறைப்பிடிப்பு

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மீனவர்களை பிடித்து காங்கேசன் முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இந்திய மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

எல்லை தாண்டி வந்ததாக 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறைப்பிடிப்பு

ராமேஸ்வரம் விசைப்படகுகள் இலங்கை நெடுந்தீவு கடற்கரை அருகாமையில் அத்துமீறி நுழைந்து மீன் வளத்தை அழிப்பதாக வீடியோ ஆதரத்துடன் இலங்கை தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையிடம் புகார் அளித்ததையடுத்து இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கடலுக்கு சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அச்சத்தோடு கரை திரும்பினர். இதனால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரை திரும்பிய மீனவர்களிடம் பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கடல் முழுவதும் இலங்கை இராணுவ கப்பல்கள் அணிவகுத்து நின்று அச்சுறுத்துவதாக கரை திரும்பியவர்கள் அச்சத்தோடு குற்றச்சாட்டுகின்றனர்.