பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை! பொள்ளாட்சி அதிர்ச்சி!

 

பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை! பொள்ளாட்சி அதிர்ச்சி!

பிறந்த 20 நாட்களே ஆன ஆண் குழந்தையை பெற்றோரே 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த அவலம் பொள்ளாட்சியில் அரங்கேறி இருக்கிறது.

பொள்ளாச்சி அடுத்துள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி முருகவேல். அவரது மனைவி சுதா. இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. முருகவேல் மாற்றுத்திறனாளி என்பதால் குழந்தையை வளர்க்க சிரமம் உள்ளதாக நினைத்து குழந்தையை விற்க முயன்று உள்ளார்.

பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை! பொள்ளாட்சி அதிர்ச்சி!


குழந்தை விற்பனைக்கு இடைத்தரகராக இருந்த ஆழியார் புளியங்கண்டி பகுதியை சேர்ந்த பௌலினா என்ற பெண் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய கோவையை சேர்ந்த ராஜேஷ்குமார் அவரது மனைவி கோகிலா உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

கோவை குழந்தைகள் நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி ஆழியார் போலீசார் இந்த நடவடிக்கையினை எடுத்தனர்.

பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை! பொள்ளாட்சி அதிர்ச்சி!

இதையடுத்து கோவை செட்டிபாளையத்தில் இருந்த குழந்தை மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.