திருச்சியில் 20 கள்ள ஓட்டு கண்டுபிடிப்பு: ’சர்கார்’விஜய் பாணியில் 20 பேரும் வாக்களிப்பு

 

திருச்சியில் 20 கள்ள ஓட்டு கண்டுபிடிப்பு: ’சர்கார்’விஜய் பாணியில் 20 பேரும் வாக்களிப்பு

தன் வாக்கினை வேறு ஒருவர் போட்டுவிட்டதால் 49பி பிரிவினை பயன்படுத்தி டெண்டர் முறையில் வாக்குப்பதிவு செய்தார் சென்னை அடையாறு கலாஷேத்ரா காலனியை சேர்ந்த முதியவர். கள்ள ஓட்டினால் இளைஞர் ஒருவரும் இதே பாணியில் வாக்களித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

திருச்சியில் 20 கள்ள ஓட்டு கண்டுபிடிப்பு: ’சர்கார்’விஜய் பாணியில் 20 பேரும் வாக்களிப்பு

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதியில் 20 பேர் கள்ள ஓட்டு போட்டுவிட்டதால் 20 பேரும் 49-பி பிரிவினை பயன்படுத்தி தங்களது ஓட்டினை பதிவு செய்திருக்கிறார்கள்.

திருச்சி கிழக்கு தொகுதியில் 7 பேர், திருச்சி மேற்கு தொகுதியில் 4 பேர், திருவெறும்பூர் தொகுதியில் 3 பேர், லால்குடி தொகுதியில் 3 பேர், ஸ்ரீரங்கம் தொகுதியில் 2 பேர், மணப்பாறை தொகுதியில் ஒரு பேர் என 20 பேர் கடந்த 6ம் தேதி கள்ள ஓட்டு போட்டுவிட்டதால், உண்மையான 20 பேரினால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து அந்த 20 பேரும் சர்க்கார் விஜய் பாணியில் 49-பி பிரிவினை பயன்படுத்து டெண்டர் வாக்குகளை பதிவு செய்தனர்.