20 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு சிறுமிகளை விற்ற பாட்டி.. திருவாரூரில் நடந்த கொடுமை !

 

20 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு சிறுமிகளை விற்ற பாட்டி.. திருவாரூரில் நடந்த கொடுமை !

திருவாரூரில் 20 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு சிறுமிகளை விற்ற கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமீப காலமாக பெண் குழந்தைகளை பணத்திற்கு விற்பது போன்ற கொடுமை அதிகமாக நடந்து வருகிறது. அதனைத் தடுக்க என்ன தான் நடவடிக்கை எடுத்து வந்தாலும், தடுக்க முடியாத சூழலே நிலவுகிறது. இந்நிலையில், திருவாரூரில் 20 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு சிறுமிகளை விற்ற கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி, அவரது இரண்டு பேத்திகளை 20 ஆயிரம் ரூபாய்க்கு இடைத்தரகர்கள் மூலம் விற்றுள்ளார். இது குறித்து குடவாசல் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் அந்த சிறுமிகளை மீட்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த சிறுமிகள் பின்னலாடை ஆலையில் வேலை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 

ttn

அந்த சிறுமிகளை விற்ற பாட்டியையும், இடைத்தரகர்கள் கனகம் மற்றும் சகுந்தலா என்பவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த குழந்தைகளை யாருக்கு விற்றனர், அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் எங்கே என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.