“20 ஆண்டுகளுக்கும் மேலாக  பலாத்காரம் செய்யப்பட்டேன் ” முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. மீது பெண் குற்றச்சாட்டு ..

 

“20 ஆண்டுகளுக்கும் மேலாக  பலாத்காரம் செய்யப்பட்டேன் ” முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. மீது பெண் குற்றச்சாட்டு ..

மூன்று நாட்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்த நரேந்திர மேத்தா மற்றும் அவரது கூட்டாளர் மீது  போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர் என்று மீரா-பயந்தர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை

மும்பைக்கு அருகிலுள்ள தானே மாவட்டத்தில் உள்ள பயந்தரில் ஒரு பெண் கார்ப்பரேட்டரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக பாஜக முன்னாள் எம்எல்ஏ நரேந்திர மேத்தா மீதும் ,அவரது கூட்டாளியான சஞ்சய் தார்த்தரே மீதும் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டுள்ளது

மூன்று நாட்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்த நரேந்திர மேத்தா மற்றும் அவரது கூட்டாளர் மீது  போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர் என்று மீரா-பயந்தர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை
நரேந்திர மேத்தாவிடம்  அவர் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் குறித்து அந்த பெண் கார்ப்பரேட்டர் கூறும் வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வைரலாகியது.

women abouse

1999 முதல் துஷ்பிரயோகம் நடந்து வருவதாகவும், அவரது குடும்பத்தினர் அவரிடமிருந்து மிரட்டல்களை எதிர்நோக்கி  வருவதாகவும் அந்த பெண்  குற்றம் சாட்டியுள்ளார்.

நரேந்திர மேத்தா மற்றும் சஞ்சய் தார்தே ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்டப்படி   குற்றம் சாட்டப்பட்டதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக், நரேந்திர மேத்தாவை உடனடியாக கைது செய்யக் கோரினார்,  மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு பிரச்சினையை எழுப்பும் பாஜக, அதன் தலைவர் மீது ஏன்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் .