மணப்பாறை அருகே ரயில் மோதி, 2 இளைஞர்கள் உயிரிழப்பு

 

மணப்பாறை அருகே ரயில் மோதி, 2 இளைஞர்கள் உயிரிழப்பு

திருச்சி

மணப்பாறை அருகே ரயிலில் அடிபட்டு 2 இளைஞர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம், பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அண்ணாவி நகரைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பவரது மகன் சந்தோஷ் (18). இதேபோல் பூமாலைபட்டியை சேர்ந்த சகாயம் மகன் ஜேம்ஸ்(20). நண்பர்களான இருவரும், இன்று காலை மணப்பாறை அடுத்த பூசாரிகளம் பகுதியில் ரயிலில் அடிபட்டு, தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் சடலமாக கிடந்தனர்.

மணப்பாறை அருகே ரயில் மோதி, 2 இளைஞர்கள் உயிரிழப்பு

இதனை கண்ட அந்த பகுதி மக்கள் திருச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், இருவரது உடல்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இரவு நேரத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் மோதி உயிரிழந்திருக்கக் கூடும் என தெரிய வந்துள்ளது.