விபத்தில் பலியான இளைஞர்கள் : தீபாவளிக்கு புத்தாடை எடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்!

 

விபத்தில் பலியான இளைஞர்கள் : தீபாவளிக்கு புத்தாடை எடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாகையில் அரங்கேறியுள்ளது.

விபத்தில் பலியான இளைஞர்கள் : தீபாவளிக்கு புத்தாடை எடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்!

நாகை மாவட்டம் பனைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது நண்பர் தேமங்கலத்தை சேர்ந்த பபின்ராஜ் . இவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகை வருவதால் புத்தாடை வாங்க இரு சக்கர வாகனத்தில் நாகையை நோக்கி சென்றுள்ளனர்.

விபத்தில் பலியான இளைஞர்கள் : தீபாவளிக்கு புத்தாடை எடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்!

அப்போது சிக்கல் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஒன்று பூமிநாதன் – பபின்ராஜ் சென்ற வாகனம் மீது மோதியுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் பலியான இளைஞர்கள் : தீபாவளிக்கு புத்தாடை எடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்!

இதையடுத்து படுகாயமடைந்த பபின்ராஜை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் பலியான இளைஞர்கள் : தீபாவளிக்கு புத்தாடை எடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்!

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிக்கல் போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். புத்தாடை எடுக்க சென்ற நண்பர்கள் விபத்தில் பலியான செய்தி குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.