இருசக்கர வாகனம் – மினிவேன் நேருக்கு நேர் மோதல்; இருவர் பலி!

 

இருசக்கர வாகனம் – மினிவேன் நேருக்கு நேர் மோதல்; இருவர் பலி!

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது, மினிவேன் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த சின்னச்சம்பையை சேர்ந்த ஜெயராஜ் மகன் ஆறுமுகவேலன் (27). வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில், ஆறுமுக வேலனின் வீட்டிற்கு, அவரது உறவினர் சென்னையை சேர்ந்த நாகராஜன் என்பவர் குடும்பத்துடன் வந்திருந்தார்.

இருசக்கர வாகனம் – மினிவேன் நேருக்கு நேர் மோதல்; இருவர் பலி!

நேற்று காலை இரு வீட்டாரும் காரில் அரியமான் கடற்கரைக்கு புறப்பட்டு சென்றனர். ஆறுமுகவேலன் மற்றும் நாகராஜ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றனர். உச்சிப்புளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த மினிவேன் அதிவேகமாக மோதியது. இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை உறவினர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆறுமுகவேலன் உயிரிழந்தார். நாகராஜன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அக்காள்மடம் பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.