இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது – 5 கிலோ கஞ்சா பறிமுதல்!

 

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது – 5 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை

மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திவந்த 2 இளைஞர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணையை ஒட்டிய வனப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்த முயன்றபோது, அவர்கள் வாகனத்தில் வேகமாக தப்பிச்செல்ல முயன்றனர்.

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது – 5 கிலோ கஞ்சா பறிமுதல்!

இதனால் நக்சல் தடுப்பு பிரிவினர் அவர்களது வாகனத்தை துரத்திச்சென்று பிடித்தனர். அப்போது வாகனத்தில் 5 கிலோ அளவிலான கஞ்சாவை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அ வர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ஆனைக்கட்டி பகுதியை சேர்ந்த வீரபாண்டி மற்றும் சரவணன் என்பது தெரியவந்தது.

கேரள மாநிலம் அட்டப்பாடியில் இருந்து கஞ்சாவை கடத்தியபோது போலீசாரிடம் பிடிபட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரும் காரமடை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர்.