கோவையில் தனியார் பேருந்து மீது கல்வீச்சு – இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் கைது!

 

கோவையில் தனியார் பேருந்து மீது கல்வீச்சு – இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் கைது!

கோவை

கோவையில் தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய இந்து முன்னணியை சேர்ந்த 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் நேற்று காலை தனியார் பேருந்தின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பேருந்தின் முன்புற கண்ணாடி பலத்த சேதமடைந்தது. கல்வீச்சு சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர், செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவையில் தனியார் பேருந்து மீது கல்வீச்சு – இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் கைது!

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ராகுல் (19) மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், கல்வீச்சு சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கைதான இருவரும் இந்து முன்னணி அமைப்பில் உறுப்பினராக உள்ளது தெரியவந்தது.