2 வயது குழந்தையுடன் இளம்பெண் மாயம்… போலீசார் விசாரணை….

 

2 வயது குழந்தையுடன் இளம்பெண் மாயம்… போலீசார் விசாரணை….

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழைய சித்துவார்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மாரிமுத்து. இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இன்று மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு வடமதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

2 வயது குழந்தையுடன் இளம்பெண் மாயம்… போலீசார் விசாரணை….

சிகிச்சை பெற்ற பின் இருவரையும் பேருந்து நிறுத்தம் பகுதியில் நிற்க சொல்லிவிட்டு அவர் கடைக்கு சென்றுள்ளார். சிறிதுநேரம் கழித்து வந்தபோது மனைவி மற்றும் குழந்தை மாயமானதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து பல்வேறு இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து, மனைவி மற்றும் குழந்தையை மீட்டுத்தரக் கோரி மாரிமுத்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 2 வயது குழந்தையுடன் இளம்பெண் மாயமான சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.