டிராக்டர் மோதி விபத்து: 2 வயது குழந்தை பரிதாப மரணம்!

 

டிராக்டர் மோதி விபத்து: 2 வயது குழந்தை பரிதாப மரணம்!

சாலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது டிராக்டர் மோதியதில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கருவேப்பிலைங்குறிச் பகுதியை சேர்ந்த தன்யஸ்ரீ(2), இன்று காலை சாலையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அவ்வழியே வந்த டிராக்டர், நிலைதடுமாறி குழந்தை மீது மோதியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய், குழந்தையை மீட்க முயன்றுள்ளார். ஆனால், டிராக்டர் மோதியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

டிராக்டர் மோதி விபத்து: 2 வயது குழந்தை பரிதாப மரணம்!

காப்பாற்ற முயன்ற போது படுகாயம் அடைந்த குழந்தையின் தாயாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.