விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி!

 

விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி!

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி கூலி தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாறு ஶ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் கோட்டைபாண்டி (55). கூலி தொழிலாளி. இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (30) என்பவருடன் முருங்கை தோட்டத்தில் காய் பறித்துக் கொண்டிருந்தார்.

விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி!

அப்போது, அந்த பகுதியில் திடீரென கனமழை பெய்ததால் இருவரும் தோட்டத்தின் அருகே இருந்த வேப்பமரத்தின் கீழ் ஒதுங்கி நின்றனர். அப்போது, எதிர்பாரத விதமாக மரத்தின் மீது மின்னல் தாக்கியதில், கீழே நின்றிருந்த இருவரும் மயங்கி விழுந்தனர்.

இதனையடுத்து, அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைககாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து, குளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.