சூளகிரி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து – இருவர் பலி!

 

சூளகிரி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து – இருவர் பலி!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மினி லாரி கவிழ்ந்த விபத்தில், கூலி தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மாரண்டப்பள்ளியை சேர்ந்த தொழிலாளர்கள், விவசாய பணிக்காக நேற்று மினி லாரியில் சென்று கொண்டிருந்தனர். கொரலதொட்டி என்ற இடத்தின் அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

சூளகிரி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து – இருவர் பலி!

இந்த விபத்தில், மாரண்டப்பள்ளியை சேர்ந்த துரைராஜ் (14), ஆஷா(25) உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சூளகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே துரைராஜ், ஆஷா அகியோர் உயிரிழந்தனர்.

மற்ற 4 பேருக்கும் சூளகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துமனை கொண்டு செல்லப்பட்டனர. விபத்து குறித்து, தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.