வேடச்சந்தூர் அருகே லாரி மோதி, 2 பெண்கள் பலி!

 

வேடச்சந்தூர் அருகே லாரி மோதி,  2 பெண்கள் பலி!

திண்டுக்கல்

வேடச்சந்தூர் அருகே லாரி மோதிய விபத்தில் தனியார் தூற்பாலை பெண் ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அடுத்த சத்திரப்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு கிரியம்பட்டி பகுதியை சேர்ந்த தேவதாஸ் மனைவி அலமேலு (55) மற்றும் திருமலைச்சாமி மனைவி விஜயா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மதியம் பணிக்கு செல்வதற்காக இருவரும் கரூர் – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் நடந்துசென்று கொண்டிருந்தனர்.

வேடச்சந்தூர் அருகே லாரி மோதி,  2 பெண்கள் பலி!

அப்போது, அந்த வழியாக மதுரையில் இருந்து சேலத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக இருவர் மீதும் மோதியது. இந்த விபத்தில் அலமேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விஜய படுகாயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேடச்சந்தூர் போலீசார் விஜயாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, வேடச்சந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவகங்கையை சேர்ந்த லாரி ஓட்டுநர் முனீஸ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.