கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி உள்பட 2 பெண்கள் பலி!

 

கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி உள்பட 2 பெண்கள் பலி!

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 17 வயது சிறுமி உள்பட 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பழனியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஷாலினி (17), மேகலா(30) மற்றும் செல்வி. கிணறு வெட்டும் தொழில் செய்து வரும் இவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சிக்காடு பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மூவரும் அதே பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றனர். தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்போது எதிர்பாராத விதமாக ஷாலினி மற்றும் மேகலா ஆகியோர் நீரில் மூழ்கினார். மேலும், அவர்களை காப்பாற்ற முயன்ற செல்வியும் நீரில் மூழ்கினார்.

கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி உள்பட 2 பெண்கள் பலி!

இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் குட்டையில் இறங்கி மூவரையும் தேடினர். மேலும், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் செல்வியை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து தீவிரமாக தேடிய நிலையில் ஷாலினி, மேகலா ஆகியோர் உயிரிழநத நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

தகவலின் பேரில் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.