சோழவந்தான் அருகே இறுதி ஊர்வலத்தில் லாரி புகுந்ததில், 2 பெண்கள் பலி!

 

சோழவந்தான் அருகே இறுதி ஊர்வலத்தில் லாரி புகுந்ததில், 2 பெண்கள் பலி!

மதுரை

சோழவந்தான் அருகே இறுதி ஊர்வலம் சென்ற கூட்டத்திற்குள் லாரி புகுந்ததில், 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்த திருவேடம் பகுதியை சேர்ந்த பொன்னையா என்பவர் நேற்று முன்தினம் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து, நேற்று அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. இதற்கு, தண்ணீர் எடுப்பதற்காக உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் வைகை ஆற்றுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

சோழவந்தான் அருகே இறுதி ஊர்வலத்தில் லாரி புகுந்ததில், 2 பெண்கள் பலி!

அப்போது, மதுரையில் இருந்து சோழவந்தான் நோக்கி அதிவேகமாக சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்துசென்ற பெண்கள் மீது மோதியது. இதில், திருவேடம் பகுதியை சேர்ந்த பொன்மலர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராணி உள்ளிட்ட 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநர் கைதுசெய்தனர்.