ஈரோட்டுக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகை

 

ஈரோட்டுக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகை

ஈரோடு

பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வந்தடைந்தன. ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வெளி மாவட்டங்களிலிருந்து கோதுமை, நெல் மூட்டை, சர்க்கரை ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டு, விநியோகம் செய்யப்படுகிறது.
அதன்படி இன்று தஞ்சாவூரில் இருந்து 52 சரக்கு ரெயில் பெட்டிகளில் ஈரோடு மாவட்டத்திற்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வந்தடைந்தது.

ஈரோட்டுக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகை

ஈரோடு ரயில்வே பணிமனைக்கு கொண்டுவரப்பட்ட இந்த நெல் மூட்டைகள், நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் அரசு குடோன்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. பின்னர் அவை, நியாய விலைக் கடைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.