ஈரோடு வந்த 2 ஆயிரம் அரிசி மூட்டைகள்

 

ஈரோடு வந்த  2 ஆயிரம் அரிசி மூட்டைகள்

திருவாரூரில் இருந்து 2 ஆயிரம் டன் அரிசி மூட்டைகள் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் வழங்குவதற்கு, வெளி மாவட்டத்தில் இருந்து அரிசி கோதுமை போன்றவை கொண்டு வரப்படுகின்றன.

ஈரோடு வந்த  2 ஆயிரம் அரிசி மூட்டைகள்

அதன்படி இன்று திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் அரிசி மூட்டைகள் 20 சரக்கு ரெயில் பெட்டிகளில் ஈரோடு கொண்டு வரப்பட்டது.

இந்த அரிசி மூட்டைகள் அங்கிருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு வந்த  2 ஆயிரம் அரிசி மூட்டைகள்