ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

 

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் வான்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது திடீரென பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுத்த பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த இரண்டு தீவிரவாதிகளின் அடையாளம் மற்றும் அவர்கள் எந்த தீவிரவாத குழுவை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இப்பகுதியில் மீண்டும் தீவிரவாதிகளை தேடும் பணிகள் நடந்து வருகிறது.