‘பேரையூர் அருகே இளைஞர் மரணம்’..2 எஸ்.ஐக்கள் சஸ்பெண்ட்: ஆர்.டி.ஓ தகவல்!

 

‘பேரையூர் அருகே இளைஞர் மரணம்’..2 எஸ்.ஐக்கள் சஸ்பெண்ட்: ஆர்.டி.ஓ தகவல்!

பேரையூர் அருகே இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 2 எஸ்.ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இருக்கும் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ரமேஷ் என்ற இளைஞர், 2 நாட்களுக்கு முன்னர் சாப்டூர் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ரமேஷின் அண்ணன், புனிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டது பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு, வெகு நேரம் ஆகியும் ரமேஷ் வீடு திரும்பாத நிலையில் அவர் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

‘பேரையூர் அருகே இளைஞர் மரணம்’..2 எஸ்.ஐக்கள் சஸ்பெண்ட்: ஆர்.டி.ஓ தகவல்!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவலர்கள் தான் ரமேஷை கொலை செய்து விட்டார்கள் என குற்றஞ்சாட்டிய அக்கிராம மக்கள் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 2 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பேசிய ஆர்.டி.ஓ ராஜ்குமார், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எஸ்.ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தவிருப்பதாகவும் கூறினார். மேலும், பாரபட்சமாக இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.