ஈரோட்டில் +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

 

ஈரோட்டில் +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

ஈரோடு

ஈரோட்டில் 12ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு குமலன்குட்டை கணபதி நகரைச் சேர்ந்தவர் தம்பி (57). இவர் அந்த பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் சக்திதருண்(17). ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சக்தி தருண், ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் நேற்று தம்பி மற்றும் அவரது மனைவி வெளியே சென்ற நிலையில், சக்திதருண் மட்டும் வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றார்.

ஈரோட்டில் +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

மாலை வீட்டுக்கு திரும்பிய தம்பி, வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மாடிக்கு சென்றபோது, அங்குள்ள அறையில் சக்திதருண் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும், சக்தி தருணை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சக்திதருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனால் இருவரும் மருத்துவமனையில் கதறி அழுதனர். இது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.