பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால், +2 மாணவர் தற்கொலை!

 

பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால்,  +2 மாணவர் தற்கொலை!

தென்காசி

தென்காசி அருகே பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால், 12 ஆம் வகுப்பு மாணவர் தூக்கட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த அச்சன்புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் தளவாய் – தங்கம் தம்பதியினர். இவர்களது மகன் கார்த்திக் பாண்டி(17). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கார்த்திக் பாண்டி பள்ளிக்கு செல்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால்,  +2 மாணவர் தற்கொலை!

இதனால், பெற்றோர் அவரை கண்டித்து உள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய தங்கம், நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்தார்.

அப்போது கார்த்திக் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனை அடுத்து, அவர் அச்சன்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.