+2 மாணவியை கடத்தி பாலியல் தொல்லை; இளைஞர் போக்சோவில் கைது!

 

+2 மாணவியை கடத்தி பாலியல் தொல்லை; இளைஞர் போக்சோவில் கைது!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே பிளஸ் 2 மாணவியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கீறிப்பாறை அடுத்த தடிக்காரகோணம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், முருகன் அதே பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்துள்ளார்.

மேலும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்த நிலையில், அவரது பெற்றோர் கீறிப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், முருகன் மாணவியுடன் தலைமறைவாகினார்.

+2 மாணவியை கடத்தி பாலியல் தொல்லை; இளைஞர் போக்சோவில் கைது!

இதனை அடுத்து, இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்த இருவரையும் ரகசிய தகவலின் பேரில் நேற்று போலீசார் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, சிறுமி அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார், அவரை நாகர்கோயில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.