+2 மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை – இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

 

+2 மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை – இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

தேனி

வருசநாடு அருகே 12ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ளது சீலமுத்தையாபுரம் கிராமம். இந்த பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 15ஆம் தேதி திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், மாணவியின் தந்தை கடந்த 16ஆம் தேதி வருசநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

+2 மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை – இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

புகாரின் மீது போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (25) என்பவர் மாணவியை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, மாணவியை பத்திரமாக மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக பிரபாகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.