சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி!

 

சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி!

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 16 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை அதிகள் முகாமை சேர்ந்தவர் பொன்மனச்செல்வன் (19). இவர் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த முகேஷ் மற்றும் பிரதீபன் (16) ஆகியோருடன் பண்ணாரிக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

பண்ணாரி சோதனைச் சாவடி அருகேயுள்ள கொக்கிரகுண்டி பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில், பொன்மனச்செல்வன் மற்றும் பிரதீபன் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், முகேஷ் பலத்த காயமடைந்தார்.

சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் போலீசார், முகேஷை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட முகேஷுக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்த 2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.