சேலத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 2 போலீசார், கொரோனாவுக்கு பலி!

 

சேலத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 2 போலீசார், கொரோனாவுக்கு பலி!

சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் சேலம் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை கண்ணன் உயிரிழந்தார்.

சேலத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 2 போலீசார், கொரோனாவுக்கு பலி!

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வந்தவர், சம்பத்குமார். கடந்த வாரம் சம்பத்குமாருக்கு வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி சம்பத்குமாரும் உயிரிழந்தார்.

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் அடுத்தடுத்து இரு போலீசார் உயிரிழந்த சம்பவம், சக போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.