கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – இருவர் பலி!

 

கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – இருவர் பலி!

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதியவர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராயர்பாளையத்தை சேர்ந்தவர் அமர்நாத்(24). இவரது நண்பர் தென்காசியை சேர்ந்த சரவண கார்த்திகேயன். இவர்கள் நேற்று இருசக்கர வாகனத்தில் சின்ன சேலத்திற்கு சென்றுவிட்டு, ராயர்பாளையத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். தோட்டபாடி அருகே சென்றபோது அமர்நாத் வாகனத்தின் மீது எதிரே தத்தாதிபுரத்தில் இருந்து இருசக்கர வாகத்தில் வந்த கோவிந்தசாமி என்பவரது வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – இருவர் பலி!

இந்த விபத்தில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அமர்நாத், சரவண கார்த்திகேயன் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அமர்நாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரவண காத்திகேயனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த கீழ்க்குப்பம் போலீசார், கோவிந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகன விபத்தில் இருவர் பலியான சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.