வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர்- பொதுமக்கள் பிடித்து தர்மஅடி, போலீசிடம் ஒப்படைப்பு

 

வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர்- பொதுமக்கள் பிடித்து தர்மஅடி, போலீசிடம் ஒப்படைப்பு

திருப்பத்தூரில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை நேற்று நள்ளிரவு பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில், நூருல்லா பேட்டை பகுதியில் நேற்று நள்ளிரவு இரண்டு மர்ம நபர்கள், ஒரு வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருட முயன்றனர்.


இதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து விசாரிக்கையில் முன்னுக்கு பின் பதில் அளித்துள்ளனர். அவர்கள் இரு சக்கர வாகனத்தை திருடும் கும்பல் என அறிந்த பொதுமக்கள், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர்- பொதுமக்கள் பிடித்து தர்மஅடி, போலீசிடம் ஒப்படைப்பு

போலீஸ் விசாரணையில், அவர்கள் அந்த பகுதியில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார்,தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள், வேறு பகுதியில் கைவரிசை காட்டியுள்ளார்களா என்பதும், திருடிய வாகனங்களை என்ன செய்தார்கள் என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.