ஆண்டிப்பட்டி அருகே இருசக்கர வாகன விபத்தில் இருவர் பலி!

 

ஆண்டிப்பட்டி அருகே இருசக்கர வாகன விபத்தில் இருவர் பலி!

தேனி

ஆண்டிப்பட்டி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகர் கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (49). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (39). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மலை, பழனிசாமி அதே ஊரை சேர்ந்த கருப்பையா (50) என்பவருடன், வெளியூருக்கு தோட்ட வேலைக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

ஆண்டிப்பட்டி அருகே இருசக்கர வாகன விபத்தில் இருவர் பலி!

இரவு 8 மணியளவில் உசிலம்பட்டி – ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் செக்போஸ்ட் பகுதியில் சென்றபோது, பின்னால் டி.சுப்புலாபுரதைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம், பழனிசாமி வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கருப்பையா, வேல்முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த ஆண்டிபட்டி போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, கருப்பையா முதலுதவி சிகிச்சைக்கு பின், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.