சென்னையில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது – காவல் ஆணையர் அதிரடி!

 

சென்னையில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது – காவல் ஆணையர் அதிரடி!

சென்னை

சென்னை புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி பகுதியில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் என்ற இம்ரான்(33). அதேபோல் சென்னை வியாசர்பாடி கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் யோகேஷ் என்கிற வினித்(23). இவர்கள் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குள் புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

சென்னையில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது – காவல் ஆணையர் அதிரடி!

இந்த நிலையில், இருவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் அடைக்க, சம்பந்தப்பட்ட 2 காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.

அதனை ஏற்று, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய நேற்று உத்தரவிட்டார். இதனை அடுத்து, முகமது உசேன் மற்றும் யோகேஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்த போலீசார், அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.