மரத்தின் மீது மோதி உருக்குலைந்த கார் : சிறுவன் உட்பட இருவர் பரிதாப மரணம்!

 

மரத்தின் மீது மோதி உருக்குலைந்த கார் : சிறுவன் உட்பட இருவர் பரிதாப மரணம்!

கோவை அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில், சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

கோவை ஆலாந்துறை காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் வசித்து வரும் இளைஞர் சஞ்சீவிகுமார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இவரது உறவினர் அனந்தராமன், 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். சஞ்சீவிகுமாரும் அனந்தராமனும் நேற்று உறவினர் ஒருவரை சென்னனூரில் விடுவதற்காக காரில் சென்றுள்ளனர். அந்த நபரை விட்டுவிட்டு, அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சிறுவாணி சாலையில் கார் விபத்துக்குள்ளானது.

மரத்தின் மீது மோதி உருக்குலைந்த கார் : சிறுவன் உட்பட இருவர் பரிதாப மரணம்!

சஞ்சீவ்குமார் காரை ஓட்டிச் சென்ற நிலையில், கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.