‘பைக் மீது நேருக்கு நேர் மோதிய லாரி’.. கண்ணிமைக்கும் நொடியில் 2 பேருக்கு நேர்ந்த கதி!

 

‘பைக் மீது நேருக்கு நேர் மோதிய லாரி’.. கண்ணிமைக்கும் நொடியில் 2 பேருக்கு நேர்ந்த கதி!

கொரோனா பாதிப்பால் மக்கள் வெளியே செல்வதை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் குறைந்திருந்த வாகன புழக்கமும், விபத்துகளும் தற்போது மீண்டும் அதிகமாகி வருகிறது. இன்று காலை ஓசூர் அருகே தாறுமாறாக வந்த லாரி மோதி சாலையில் உறங்கிக் கொண்டிருந்த கரும்பு ஜூஸ் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத்தொடர்ந்து, தற்போது சென்னையில் ஒரு விபத்து நடந்திருக்கிறது.

‘பைக் மீது நேருக்கு நேர் மோதிய லாரி’.. கண்ணிமைக்கும் நொடியில் 2 பேருக்கு நேர்ந்த கதி!

சென்னை அம்பத்தூர் அருகே இன்று பிற்பகல், விக்னேஷ்(20) என்பவரும் செல்வா(15) என்பவரும் பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி, இவர்களது பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விக்னேஷ் மற்றும் செல்வா ஆகிய இரண்டு பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.