தேனி அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் பரிதாப பலி!

 

தேனி அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் பரிதாப பலி!

தேனி அருகே மின்னல் தாக்கியதில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று தேனி, சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் தேனி அருகே மின்னல் தாக்கியதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தேனி அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் பரிதாப பலி!

தேனி மாவட்டத்தில் இருக்கும் அரப்படிதேவன்பட்டி என்னும் பகுதியில் நேற்று கனமழை பெய்தது. அப்போது, அங்கு தோட்டப்பணியில் ஈடுபட்டிருந்த 3 பேரை மின்னல் தாக்கியதில் உடல் கருகி 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மின்னல் தாக்கியதால் படுகாயம் அடைந்த ஒருவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.