பீர் பாட்டிலால் எஸ்.ஐ மண்டையை உடைத்த 2 பேர் கைது!

 

பீர் பாட்டிலால் எஸ்.ஐ மண்டையை உடைத்த 2 பேர் கைது!

நங்கநல்லூர் அருகே வீடு திரும்பிக் கொண்டிருந்த எஸ்.ஐயை பீர் பாட்டிலால் தாக்கிய விவகாரத்தில் திமுகவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர், சென்னை நங்கநல்லூர் கங்கா நகர் சுரங்கபாதை அருகே பரங்கிமலை உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் பணியை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, சுரங்கப்பாதை அருகே 4 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அதனை பார்த்த எஸ்.ஐ மோகன்தாஸ், பொது இடத்தில் மது அருந்தக்கூடாது என அவர்களிடம் கூறியுள்ளார்.

பீர் பாட்டிலால் எஸ்.ஐ மண்டையை உடைத்த 2 பேர் கைது!

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், கையில் வைத்திருந்த பார் பாட்டிலால் மோகன்தாஸை தாக்கியுள்ளனர். தான் ஒரு காவலர் என மோகன்தாஸ் கூறியும், அந்த கும்பல் அவரை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த எஸ்.ஐ மோகன்தாஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பீர் பாட்டிலால் எஸ்.ஐ மண்டையை உடைத்த 2 பேர் கைது!

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பரங்கிமலை போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஆலந்தூர் 162வது வட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார் மற்றும் அஜித்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.