கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் சேலம் அரசு மருத்துவமனையில் 2 பேர் அனுமதி!

 

கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் சேலம் அரசு மருத்துவமனையில் 2 பேர் அனுமதி!

இந்தியாவில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நோய் கருப்பு பூஞ்சை. இந்த நோயால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனம் அதிர்ச்சி தரும் செய்தியை வெளியிட்டிருந்தது. கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களையே இந்த நோய் அதிகமாக தாக்குவதாக கூறப்படுகிறது.

கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் சேலம் அரசு மருத்துவமனையில் 2 பேர் அனுமதி!

இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 50 வயது கொண்ட நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன் வீடு திரும்பியுள்ளார். இந்த சூழலில் அவருக்கு கண்ணில் கருப்பு பூஞ்சை அறிகுறி இருந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஓமலூர் பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபருக்கும் கண்ணில் கருப்பு பூஞ்சை தொற்று போல் தென்பட்டுள்ளது. இதனையடுத்து அவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.