சிதம்பரம் அருகே அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து; இருவர் பலி, 15 பேர் படுகாயம்!

 

சிதம்பரம் அருகே அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து; இருவர் பலி, 15 பேர் படுகாயம்!

கடலூர்

சிதம்பரம் அருகே அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

நாகையில் இருந்து இன்று காலை 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு பேருந்து ஒன்று, சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் வளைவில் திரும்பியபோது, பேருந்து எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

சிதம்பரம் அருகே அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து; இருவர் பலி, 15 பேர் படுகாயம்!

இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு வந்த சிதம்பரம் நகர போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.