கொரோனா தொற்றால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர்கள் இன்று மரணம்!

 

கொரோனா தொற்றால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர்கள் இன்று மரணம்!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் 2 முதியவர்கள் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் மற்றும் 61 வயது சாணார்பட்டியைச் சேர்ந்த முதியவர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் உயிரிழந்தனர். இன்று மட்டும் இரண்டு ஆண்கள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர்கள் இன்று மரணம்!

இதுவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌த்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதையடுத்து கொடைக்கான‌லில் எதிர் வ‌ரும் வியாழ‌ன் (23-07-20) முத‌ல் அடுத்த‌ வார‌ம் புத‌ன் (29-07-20) வரை 7 நாட்க‌ளுக்கு கொரோனா ப‌ர‌வ‌லை த‌டுக்க‌, ம‌ருந்த‌க‌ம், பால் விற்ப‌னை த‌விர்த்து, ம‌ற்ற‌ அனைத்து க‌டைக‌ளையும் அடைக்க‌ப்போவதாக, ஒருங்கிணைந்த‌ வ‌ர்த்த‌க‌ர் ச‌ங்க‌ம் அறிவிப்பு…