“மாணவியின் தாய்க்கும் பாலியல் தொல்லை” – சிவசங்கர் பாபா மீது பாய்ந்த மேலும் 2 வழக்குகள்!

 

“மாணவியின் தாய்க்கும் பாலியல் தொல்லை” – சிவசங்கர் பாபா மீது பாய்ந்த மேலும் 2 வழக்குகள்!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா. சாமியார் என்று சொல்லிக்கொள்ளும் இவர் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி டெல்லியில் சிவசங்கர் பாபாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். அவர் மீது 3 போக்சோ வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

“மாணவியின் தாய்க்கும் பாலியல் தொல்லை” – சிவசங்கர் பாபா மீது பாய்ந்த மேலும் 2 வழக்குகள்!

அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ஜாமின் வழங்காமல் இரண்டு மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதற்குப் பின்னர் இன்னொரு மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்றாவது வழக்கும் அவர் மீது பாய்ந்தது. அந்த வழக்கும் போக்சோ பிரிவுக்கு மாற்றப்பட்டு கைது செய்யப்பட்டார். இச்சூழலில் பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் மாணவியின் தாயாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

“மாணவியின் தாய்க்கும் பாலியல் தொல்லை” – சிவசங்கர் பாபா மீது பாய்ந்த மேலும் 2 வழக்குகள்!

இப்புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் ஜாமின் மனுவில் மறைந்திருந்த ஒரு விஷயம் அம்பலமாகியது. மனுவில் தான் ஒரு ஆண்மையற்றவன் என்பதால் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை எனக் கூறியுள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில் தனக்கு மேற்கொண்ட ஆண்மை பரிசோதனையில் தனக்கு ஆண்மை இல்லை என முடிவு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சிவசங்கர் பாபா ஆன்மீகப் பணிக்கு வருவதற்கு முன்பாக அவருக்கு திருமணமாகி மகன், மகள் இருப்பது கவனிக்கத்தக்கது.