கேட்ட கணவன் -மறுத்த புது மனைவி -அடுத்து நடந்த விபரீதம்

 

கேட்ட கணவன் -மறுத்த புது மனைவி -அடுத்து நடந்த விபரீதம்

வரதட்சணை தகராறில் புது மனைவியை கொன்ற கணவனை போலீஸ் கைது செய்தது .

கேட்ட கணவன் -மறுத்த புது மனைவி -அடுத்து நடந்த விபரீதம்

தென் டெல்லியில் உள்ள மைதன்கரி பகுதியில் வசிக்கும் குல்தீப் ராணா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .அப்போது அவரின் திருமணத்திற்கு பெண் வீட்டில் நிறைய நகைகள் பணம் போன்றவை வரதட்சணையாக கொடுத்தனர் .அதன் பிறகு இருவரும் சில நாள் உத்ரகாண்டில் வசித்தனர் .அதன் பிறகு இருவரும் டெல்லிக்கு வந்தனர் .அப்போது  அந்தக் கணவர் அந்த பெண்ணின் பெற்றோரிடம் அவர் பெயரில் அவர்களின்  சொத்துக்களை மாற்றி கொடுக்குமாறு கூறி சண்டை போட்டார்

ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை .அதன் பிறகு அந்த ராணா அந்த மனைவியிடம் பலமுறை அதிக வ்ரதட்சணையாக  நிறைய நகைகள் கேட்டு கொடுமை படுத்தினார் ,ஆனால் அந்த பெண் மேலும் வரதட்சணை வாங்கிவரவில்லை  .இதனால் கோபமடைந்த ரானா அந்த மனைவியை கழுத்தை நெரித்தார் .அப்போது அந்தப்பெண் வலி தாங்க முடியாமல் துடித்தார் .பின்னர் மேலும் அங்கிருந்த தலியனையை  எடுத்து அவரின் கழுத்தை நெரித்து அவரின் மூச்சை  நிறுத்தினர் .பின்னர் அந்த பெண்  அந்த இடத்தில்  மயங்கி விழுந்தார் .அதன் பிறகு  அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்  அவரை  அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு தூக்கி சென்றனர் . அப்போது அந்த பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக சொன்னார்  .பின்னர் போலீசுக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது .போலீசார்   வந்து அந்தபெண்ணை கொன்ற கணவனை வரதட்சனை வழக்கிலும் , கொலை வழக்கிலும் கைதுசெய்து சிறையில்  அடைத்தனர்