கொரோனா நிவாரணம் கேட்டு 2 லட்சம் கையெழுத்து – பிரதமருக்கு அனுப்பி வைப்பு
Sep 5, 2020, 20:46 IST1599319015000
கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், நிவாரண உதவி கோரி பிரதமருக்கு 2 லட்சம் பேர் கையெழுத்திட்ட கோரிக்கை அனுப்பப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி தொண்டு நிறுவனங்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நான்கு மாதங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி மாவட்டம் முழுவதும், இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இப்படி பெறப்பட்ட 2 லட்சம் கையெழுத்துகளை, ஈரோட்டிலிருந்து பிரதமருக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுதுகள் தன்னார்வ அமைப்பு, கேர் தன்னார்வ அமைப்பு உள்ளிட்டவை இதற்கு ஏற்பாடு செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-அமுதினி