‘முதல்வர் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்கள்’ – பரபரப்பு சம்பவம்!

 

‘முதல்வர் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்கள்’ – பரபரப்பு சம்பவம்!

சென்னையில் இருக்கும் முதல்வர் பழனிசாமி வீட்டின் அருகே தூத்துக்குடியை சேர்ந்த 2 பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெய மீனாம்பிகை ஆகிய இரண்டு பெண்கள் நேற்று முதல்வர் பழனிசாமியின் வீட்டிற்கு சென்று, அவரை சந்திக்க அனுமதிக்குமாறு காவலர்களிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு காவலர்கள் அனுமதி மறுத்ததால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

‘முதல்வர் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்கள்’ – பரபரப்பு சம்பவம்!

இதையடுத்து திடீரென கிருஷ்ணம்மாள் தான் வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்திருக்கிறார். ஜெய மீனாம்பிகையும் தான் கையில் வைத்திருந்த கயிற்றை கொண்டு கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த பெண்கள் இரண்டு பேரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இரண்டு பெண்களும் எதற்காக முதல்வரை சந்திக்க வந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்கொலைக்கு முயன்ற 2 பெண்களும் தற்போது நலமுடன் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.