சுற்றுச்சுவர் கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததில் பெண் உள்பட இருவர் பலி!

 

சுற்றுச்சுவர் கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததில் பெண் உள்பட இருவர் பலி!

நாமக்கல்

பரமத்திவேலூர் அருகே சுற்றுச்சுவர் கட்டுமான பணியின்போது கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததில் பெண் உள்பட 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கயல்விழி. இவர் தனது வீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். சுமார் 50 அடிநீளமும், 7 அடி உயரமும் கொண்ட அந்த சுற்றுச்சுவரின் மீது கான்கிரீட் தளம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று சுற்றுச்சுவரை பூசும் பணியில் அதே கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் மாதேஸ்வரன் (50), பழனியப்பன், அஞ்சலையம்மாள் உள்ளிட்ட 5 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சுற்றுச்சுரின் மீது அமைத்த கான்கிரீட் தளம் இடிந்து, பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது விழுந்தது.

சுற்றுச்சுவர் கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததில் பெண் உள்பட இருவர் பலி!

இதில் பலத்த காயமடைந்த மாதேஸ்வரன் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பழனியப்பன், குணசேகரன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவல் அறிந்த பரமத்தி வேலூர் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.